மதுரை பா.ஜ.க பிரமுகரைத் தாக்க முயன்ற வழக்கு… தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு முன்ஜாமீன்!

 

மதுரை பா.ஜ.க பிரமுகரைத் தாக்க முயன்ற வழக்கு… தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு முன்ஜாமீன்!

மதுரையில் பா.ஜ.க நிர்வாகியைத் தாக்க முயன்ற வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பா.ஜ.க பிரமுகரைத் தாக்க முயன்ற வழக்கு… தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு முன்ஜாமீன்!மதுரை புறநகர் பா.ஜ.க இளைஞரணி கோட்டப் பொறுப்பாளரும், ஹோமியோபதி மருத்துவருமான சங்கபாண்டி என்பவரை மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் மூர்த்தியைப் பற்றி தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டதால் பா.ஜ.க நிர்வாகி வீட்டுக்கே சென்று செருப்பால் அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பா.ஜ.க பிரமுகர் கொடுத்த புகார் அடிப்படையில் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மதுரை பா.ஜ.க பிரமுகரைத் தாக்க முயன்ற வழக்கு… தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு முன்ஜாமீன்!மதுரை பா.ஜ.க பிரமுகரைத் தாக்க முயன்ற வழக்கு… தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு முன்ஜாமீன்!தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மூர்த்தி. இதை விசாரித்த நீதிமன்றம், தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.