மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

 

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கடந்த மார்ச் மாதத்தில் பா.ஜ.க.வில் ஐக்கியமானார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..
காங்கிரஸ்

சரி இனி யாரும் பா.ஜ.க. பக்கம் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரசுக்கு நேற்று பெரிய அடி விழுந்தது. படா மலஹாரா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் சிங் லோதி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பிரதியுமான் சிங் லோதி நேற்று போபாலில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்த சந்திப்பின்போது மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மாவும் உடன் இருந்தார்.

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..
எம்.எல்.ஏ. பிரதியுமான் சிங் லோதி

பிரதியுமான் சிங் லோதி பா.ஜ.க.வில் இணைந்ததால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் தனது எம்.எல்.ஏ.க்கள் வேறுயாரும் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார்களோ என்ற கலக்கத்தில் காங்கிரஸ் உள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது லோதி பா.ஜ.க.வில் ஐக்கியமாகி உள்ளதால் மேலும் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.