எனக்கு கொரோனா! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்க.. சிவ்ராஜ் சிங் வேண்டுகோள்

 

எனக்கு கொரோனா! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்க.. சிவ்ராஜ் சிங் வேண்டுகோள்

மத்திய பிரதேச பா.ஜ.க. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில தினங்களாக கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்ததால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டேன். எனது கொரோனா வைரஸ் பரிசோதனை அறிக்கைகள் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளன.

எனக்கு கொரோனா! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்க.. சிவ்ராஜ் சிங் வேண்டுகோள்

என்னுடன் தொடர்பு கொண்ட சக ஊழியர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். டாக்டர்களின் அறிவுறுத்தல்படி, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறேன், என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். கொரோனாவை தவிர்க்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன் ஆனால் பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் என்னை சந்திக்க வந்தனர்.

எனக்கு கொரோனா! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்க.. சிவ்ராஜ் சிங் வேண்டுகோள்

கொரோனா நிலவரத்தை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆய்வு செய்ய முடிந்த அளவு முயற்சி செய்கிறேன். நான் இல்லாத பட்சத்தில், இந்த கூட்டம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் பூப்பேந்தர் சிங், சுகாதார கவல் அமைச்சர் விஷ்வாஸ் சரங் மற்றும் சுகாதார அமைச்சர் பிரபுராம் சவுத்ரி தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.