அணை பகுதியில் குளித்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழப்பு

 

அணை பகுதியில் குளித்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழப்பு

மதுரை

மதுரை அருகே நீர்த் தேக்கத்தில் குளித்த இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(35). விவசாய தொழிலாளியான இவருக்கு சமயக்காள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கருப்பசாமி இன்று பிற்பகல் எம்.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் நீர்த்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அணையில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க முயன்றபோது திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அணை பகுதியில் குளித்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின் கருப்பசாமியை சடலமாக மீட்டனர். இதனை தொடர்ந்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கருப்பசாமி மனைவி புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.