கொரோனாவுக்கு சித்த மருத்துவம் பெற வேண்டுமா? இங்கே செல்லலாம்!!- சுகாதாரத்துறை

 

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் பெற வேண்டுமா? இங்கே செல்லலாம்!!- சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. நோயின் தீவிரத்தால் அனைவரும் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் சூழலில், படுக்கைகள் நிரம்பிவழிகின்றன. இந்நிலையில் சித்த மருத்துவமனைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது.

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் பெற வேண்டுமா? இங்கே செல்லலாம்!!- சுகாதாரத்துறை

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்தூர் மற்றும் சூரப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.