பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

 

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்


திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை சேந்தவர் பேக்கரி உரிமையாளர் சக்கரபாணி. இவர் கர்நாடக மாநிலம், ஹாசனில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து உறவினர்களுடன் சொகுசு காரில் சென்றுள்ளார்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

இந்நிலையில் இன்று மதியம் திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு வந்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். சுங்கச்சவாடியின் உள்ளே தீப்பற்றி எரிந்த காரை, பளுதூக்கும் கனரக வாகனத்தின் உதவியுடன் சாலைக்கு கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்