“வாரம் ஒருத்தனுக்கு என்னை பேரம் பேசி விக்கிறீங்களே” -வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

 

“வாரம் ஒருத்தனுக்கு என்னை பேரம் பேசி விக்கிறீங்களே” -வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

வேலை தேடி வந்த பெண்ணை பலருக்கு விற்று பலாத்காரம் செய்த ஒரு கூட்டத்தையே போலீசார் கைது செய்தார்கள் .

“வாரம் ஒருத்தனுக்கு என்னை பேரம் பேசி விக்கிறீங்களே” -வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

நேபாளத்தைச் சேர்ந்த 16வயதான டீனேஜ் பெண் ,சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லக்னோவில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும்  உப்ரேதா குமார் என்ற 57 வயதான நபர் அவரை  மஹாநகரில் உள்ள தன்னுடைய  வீட்டிற்கு அழைத்து சென்றார்.அதன் பிறகு அவர் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்தார் . அதன் பிறகு அவர் அந்த பெண்ணுக்கு அங்குள்ள ஒரு இடத்தில பணிப்பெண் வேலை வாங்கி கொடுத்தார் .அதனால் அதை காரணம் காட்டி, மேலும் பலமுறை அவரை பலாத்காரம் செய்தார் .

அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணை பல வாலிபர்களிடம் விலை பேசி விற்றார் .முதலில் அந்த பெண் உப்ரேதா குமாரால் , ஜீது காஷ்யப் என்பவரிடம் விற்க்கப்பட்டார் ,அதன் பிறகு  அஜய் குமார் என்பவரிடமும் ,பிறகு அவரிடமிருந்து  வருண் திவாரி என்பவரிடமும் அந்த பெண் பலருக்கு விற்கப்பட்டார் .இதன் காரணமாக அந்த பெண் கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து தன்னுடைய ஊருக்கே சென்றார் .

“வாரம் ஒருத்தனுக்கு என்னை பேரம் பேசி விக்கிறீங்களே” -வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

அங்கு அவர் ஒருநாள் வயிற்று வலியால் துடித்த போது டாக்டரிடம் அவரின் தாயார் கூட்டி சென்றார் .அப்போது  அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஐந்து மாத கர்ப்பினியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியானார்கள் .அதனால் அவரின் பெற்றோர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தன்னை ஏமாற்றிய நபர்கள் பற்றி கூறினார் .பின்னர் அவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய உப்ரேதா குமார் (57), ஜீது காஷ்யப் (38), அஜய் குமார் (47), வருண் திவாரி (38) ஆகியோரை கைது செய்தார்கள் .