காதலனுடன் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட திருநங்கை!

 

காதலனுடன் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட திருநங்கை!

காரைக்காலில் திருநங்கை மற்றும் அவருடைய காதலன் இருவரும் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலையடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப் (26) இவர் காரைக்கால் நிரவி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சிவானி (30) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழகியுள்ளார். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதையறிந்த திலீப் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் திலீப் மற்றும் திருநங்கை சிவானியும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காதலனுடன் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட திருநங்கை!

இந்நிலையில் இன்று காலை இருவரும் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதை அறிந்த நிரவி காவல் அதிகாரிகள் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திலீபை கொலை செய்துவிட்டு திருநங்கை சிவானி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.