ஒலிம்பிக் போட்டி : இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா!

 

ஒலிம்பிக் போட்டி : இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா!

இந்தியாவின் லவ்லினா 69 கிலோ பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியில் சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டை கால் இறுதிச்சுற்று நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை லவ்லினாவும் சீன தைபே வீராங்கனை நின் சின் சென் என்பவரும் நேருக்கு நேர் மோதினர். 4 – 1 என்ற கணக்கில் நின் சின்னை வீழ்த்திய லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் போட்டி : இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா!

இதனால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்றாலும் வெண்கலம் அல்லது சிறப்பாக ஆடினால் வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் அவர் தங்கப் பதக்கத்தை முத்தமிட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே, இந்திய வீராங்கனை மீரா பாய் சானு 49 கிலோ பளுத்தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.