ரஜினி மக்கள் மன்றத்தில் கொத்துக்கொத்தாக இணையும் மகளிர்!

 

ரஜினி மக்கள் மன்றத்தில் கொத்துக்கொத்தாக இணையும் மகளிர்!

தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் இணைந்தனர்.

ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ரஜினி மக்கள் மன்றத்தில் கொத்துக்கொத்தாக இணையும் மகளிர்!

2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கவுள்ள கட்சி வெற்றி பெற பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் மகளிர் கூறினார். தற்போது ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வரும் இந்த அமைப்பு ஜனவரி மாதத்திற்கு பிறகு கட்சியாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.