எட்டாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த லாரி ஓட்டுனர்

 

எட்டாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த லாரி ஓட்டுனர்

சங்ககிரி அருகே எட்டாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

எட்டாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த லாரி ஓட்டுனர்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியை, அவரது உறவினர் கருப்பண்ணன் மற்றும் அவரது தாயார் அருக்காணி ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண்கேட்டு வந்துள்ளனர். அப்பொழுது மாணவியின் தாயார் செல்லம்மாள் மற்றும் அண்ணன் சிங்காரம் ஆகியோர் மாணவியை கருப்பண்ணனுக்கு திருமணம் செய்துவைக்க சம்மதித்ததுடன் மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மாணவி தான் பள்ளிக்கு செல்லவேண்டும் எனக் கூறியும் அவரது பேச்சை கேட்காமல் திருமணம் செய்ததுடன் மாணவியை கட்டாயப்படுத்தி கருப்பண்ணன் வன்புணர்வு செய்ததாக நேற்று சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தேவி உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று லாரி ஓட்டுநர் கருப்பண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார். தலைமறைவான கருப்பண்ணின் தாயார் அருக்காணி மற்றும் சிறுமியின் தாயார் செல்லம்மாள், சகோதரன் சிங்காரம் ஆகியோரை தேடிவருகின்றனர்.