நீலகிரியைத் தொடர்ந்து குமரியிலும் புகுந்த வெட்டுக்கிளிகள்.. அச்சத்தில் விவசாயிகள்!

 

நீலகிரியைத் தொடர்ந்து குமரியிலும் புகுந்த வெட்டுக்கிளிகள்.. அச்சத்தில் விவசாயிகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவரை பயிர்களை எல்லாம் சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை தெரிவித்தது.

நீலகிரியைத் தொடர்ந்து குமரியிலும் புகுந்த வெட்டுக்கிளிகள்.. அச்சத்தில் விவசாயிகள்!

ஆனால் தற்போது தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதாகவும் அவை பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கேரள வேளாண்துறை அளித்த தகவலின் படி, படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளி வகையை சேர்ந்தது இல்லை என்றும் இதனால் பயிர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அந்த வெட்டுக்கிளிகள் தற்போது நீலகிரி மற்றும் கிருஸ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் படையெடுத்துள்ளன.

நீலகிரியைத் தொடர்ந்து குமரியிலும் புகுந்த வெட்டுக்கிளிகள்.. அச்சத்தில் விவசாயிகள்!

இதனைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் புகுந்து விட்டனவாம். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகில் உள்ள வெட்டுக்குழி என்னும் பகுதியில் ரப்பர் மற்றும் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. அங்கு அரிய வகை வெட்டுக்கிளிகள் வாழை இலைகளை தின்று தீர்த்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் இது சாதாரண வெட்டுக்கிளி தான் என்று கூறப்படுகிறது. மேலும், இதனை அம்மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறது. அதன் முடிவு வந்தால் தான் எந்த வகை வெட்டுக்கிளி என்பது தெரிய வரும்.