ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!

 

ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!

ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.16 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க கடந்த மார்ச் 24ம் தேதி இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் தளர்வு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு வந்தது.

ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!ஊரடங்கை மீறி கார், பைக்கில் சுற்றித் திரிபவர்களை போலீசார் நிறுத்தி விசாரிக்கின்றனர். அவர்கள் தேவையான காரணத்துக்காக வெளியே வந்திருந்தால் அவர்களை அனுப்பிவிடுகின்றனர். வீட்டில் அடங்கியிருக்க முடியாமல் ஊர் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏழு லட்சத்து எழுபதாயிரம் பேர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். 5,78,854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களால் தேவைக்கு வெளியே வருபவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஊர் சுற்றியவர்களோடு சேர்ந்து அவசியத் தேவைக்கு மருந்து, பால் வாங்க வந்தவர்கள் கூட அடிபட்ட செய்தியை பார்த்து வருகிறோம். போலீஸ் நண்பர்களாக இருப்பதும், நமக்கு வில்லனாக மாறுவதும் நம்முடைய கையில்தான் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க வீட்டிலேயே இருங்கள் என்று அரசும், காவல் துறையினரும் கூறி வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் அபராதம், வாகன பறிமுதல், கைது போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.