ஆட்சிக்கு வந்தால்… ராமர் கோயிலை காட்டிலும் சீதா தேவிக்கு பெரிய கோயில்…. சிராக் பஸ்வான்

 

ஆட்சிக்கு வந்தால்… ராமர் கோயிலை காட்டிலும் சீதா தேவிக்கு பெரிய கோயில்…. சிராக் பஸ்வான்

பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை காட்டிலும் சீதாதேவிக்கு பெரிய கோயில் கட்டப்படும் என லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெற ஒரு சில தினங்களே உள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சீதாமரியில் அயோத்தி ராமர் கோயிலை காட்டிலும் சீதாதேவிக்கு பெரிய கோயில் கட்டுவோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். சீதாமரியில் லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்தால்… ராமர் கோயிலை காட்டிலும் சீதா தேவிக்கு பெரிய கோயில்…. சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை காட்டிலும் சீதாமரியில் சீதாதேவிக்கு பெரிய கோயில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். சீதாதேவி இல்லையென்றால் ராமர் முழுமை அடையமாட்டார். அதேபோல்தான் சீதாதேவியும். ஆகையால் அயோத்தி ராமர் கோயிலையும், சீதாமரியையும் இணைக்கும் பாதை உருவாக்க வேண்டும். எங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் அரசு அமைந்தால் சீதா கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவோம்.

ஆட்சிக்கு வந்தால்… ராமர் கோயிலை காட்டிலும் சீதா தேவிக்கு பெரிய கோயில்…. சிராக் பஸ்வான்
அயோத்தி ராமர் கோயில் மாதிரி

தற்போது முதல்வராக இருப்பவர் மீண்டும் முதல்வராக மாட்டார். நாங்கள் பா.ஜ.க. தலைமையில் பா.ஜ.க.-எல்.ஜே.பி. அரசாங்கத்தை அமைப்போம். பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது ‘பீகார் முதலில் பீகாரி முதலில்’ ஆவணத்தில் சீதாமரியில் சீதா கோயில் கட்டுவோம் என்பதை எல்.ஜே.பி. குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.