நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம் செய்யும் முறை

 
vetrilai

 

இன்று நாகரிக மாற்றத்தால் வெற்றிலை போடும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது .நம் ஊர்ல பெரியவர்கள் வெற்றிலை போடுவதை பார்த்திருப்பீர்கள் .அதில் பல ஆரோக்க்கிய நன்மைகள் அடங்கியுள்ளது ,மேலும் வெற்றிலை கால்சியம் சத்துக்கள் நிறைந்து ஒரு பொருள் .இது நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை வழங்க கூடியது .இது நம் நுரையீரலுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகளை முதல் சளி பிரச்சினை வரை தீர்க்கும் குணம் உண்டு .நமது நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்

vetrilai health benefits

வெற்றிலை கசாயம் செய்முறை: 

தேவையான பொருட்கள்

வெற்றிலை - 1

மிளகு - 8

சீரகம் - தேக்கரண்டி

கிராம்பு - 1

சுக்குப் பொடி - ¼ தேக்கரண்டி

தண்ணீர் - ½ கப்

முதலில் வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். அதில் மிளகு, கிராம்பு சுக்கு தூள் சேர்க்கவும்.

தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.  பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கசாயமாக குடிக்கவும்.

சுலபமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசாயம் இது. கூடுதலாக வாய் துர்நாற்றம் மற்றும் செரிமாணக் கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது.