மக்களே ! ,வேப்பம் பூ சூப்பு எத்தனை நோய்களுக்கு ஆப்பு வைக்கும் தெரியுமா ?
வேப்பம் பூவில் சூப் ,துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.
வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு.
வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.
வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம். மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும்.

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் தெரிந்திருந்தால் யாரும் உணவில் சேர்த்து கொள்ள தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த கட்டுரையில் வேப்பம்பூ, வேப்பம் பூ பொடி நன்மைகள் சிலவற்றை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
வேப்பம் பூ
இவை இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரமாகும். மேலும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது.
பழங்காலத்திலிருந்தே வேப்ப மரத்தில் குணப்படுத்தும் தன்மையை மக்கள் அறிந்து இருப்பதால், இதை “கிராமத்து மருந்தகம்” என்று அழைக்கின்றனர்.
வேம்பு அதன் மருத்துவ குணங்கள் காரணமாக 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிறம் கொண்ட வேப்பம் பூக்கள் அவற்றின் மொட்டுகளுடன் சாப்பிட உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பொதுவாக வேப்ப மரத்தின் பூக்கும் காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இருக்கும். வேப்ப மரத்தின் பூக்கள் இரவில் ஒரு இனிமையான, கிட்டத்தட்ட ஒரு வகை லேசான மல்லிகை பூ போன்ற வாசனையைக் கொண்டிருக்கும்.
தினமும் மதியம் ஒரு முறை, மாலையில் மீண்டும் ஒரு முறை என பூக்கும். பருவ மழையின் போது, மரத்தின் அடியில் பூக்கள் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.
வேப்பம் பூ நன்மைகள் :
காய்ந்த வேப்ப மரத்தின் பூவை பொதுவாக தென்னிந்தியாவில் ரசம், வேம்புப் பூ சாதம், பச்சடி, உலர்ந்த வேப்பம்பூ சூப், பருப்பு போன்ற பல்வேறு உணவு பொருட்களுடன் சேர்த்து சமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
உலர்ந்த வேப்பம்பூ பொடி கறிவேப்பிலை பொடிக்கு மிகவும் ஒத்து காணப்படும். வேப்ப மரத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக, இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
வேப்ப மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகள், பூ என அனைத்து பாகங்களும் நிரூபிக்கப்பட்ட ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல், ஆண்டிபிரைடிக், அழற்சி எதிர்ப்பு, அல்சர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
வேப்பம் பூ மருத்துவ குணங்கள் :
தொழுநோய், கண் கோளாறுகள், மூக்கில் இரத்தம் வருதல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை, தோல் புண்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களின் நோய்கள், காய்ச்சல், நீரிழிவு, ஈறு நோய் போன்ற உடல் நலக் கோளாறுகளுக்கு வேப்ப இலை மருந்தாகச் செயல்படுகிறது.
வேப்ப இலைகளைப் போல் வேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு உலர்ந்த வேப்பம் பூ மருந்தாக பயன்படுகிறது.
அரோமாதெரபி சிகிச்சையில் வேப்ப மரத்தின் பூவில் இருந்து தயாரிக்கப் படும் எண்ணெய் மற்றும் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலர்ந்த வேப்பம் பூக்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றன. மசாஜ் எண்ணெய்கள், கிரீம்கள் மற்றும் அஸ்ட்ரிஜென்ட்கள் உட்பட பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் இந்த பூவை பயன்படுத்தி தயாரிக்கலாம்.


