வெந்தயத்தை எப்படி சாப்பிடுவதுசக்கரை நோய்க்கு நல்லது தெரியுமா ?
பொதுவாக பருப்பு, விதைகள் மற்றும் தானியங்களை வேகவைத்து சாப்பிடுவதை விட முளைகட்டி உண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பல நோய்களிடமிருந்து காக்கும் .
அதிலும் குறிப்பாக மூக்கடலை, பயறு, கேழ்வரகு, கோதுமை, வெந்தயம், தினை, கொள்ளு, உளுந்து, எள், சோயா, பட்டாணி போன்ற பருப்பு வகைகளை முளைக்கட்டி வைத்து உண்பது உடலுக்கு ஆரோக்கியமானது.மேலும் முளை கட்டி சாப்பிடுவதன் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. பருப்பு, விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றின் அளவு முளைக்கட்டும்போது பலமடங்காகிறது.
2. சிலவகை பருப்புகள் முளைக்கட்டும்போது வைட்டமின் சி பத்து மடங்கு வரை அதிகமாகிறது..
3.பருப்பு வகைகளில் உள்ள இரும்புச்சத்து முளைகட்டும்போது அதில் வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு , நம் உடலில் இரும்புச் சத்தாக உருவாகிறது .
4.சோயா பீன்ஸ்,போன்ற பருப்புகளை பச்சையாகவோ அல்லது ஊற வைத்தோ உண்டால் அதில் உள்ள ஒருவகை புரோட்டீன்கள் நம் உடலுக்கு ஒத்துக்காத செயல்களை உண்டாக்கிவிடும்.
5.அதாவது சோயா பீன்ஸ்,போன்ற பருப்புகல் மூலம் அஜீரணம், பேதி போன்றவற்றை உண்டாக்கிவிடும்.
6.இதனால் இந்த வகை பருப்புகளை வேக வைத்து உண்ணலாம்.
7.அப்பொழுது தான் அந்த வகை பருப்பில் உள்ள நச்சுப் பொருள்கள் செயலிழக்கச் செய்கிறது
8.எனவே இந்த வகை பருப்புகளின் நச்சுத்தன்மையும் போக வேண்டும் , வைட்டமினும் அழியக்கூடாது என்றால் அதற்கு முளைக்கட்டி வைத்து உண்பதே ஆரோக்கியம் கொடுக்கும்
9.மேலும் இந்த பருப்பு வகைகளை முளைக்கட்டி வைத்தலின் போது பருப்பு வகைகள் எளிதில் செரிமானம் ஆகக் கூடியதாக மாறிவிடும்.
10.அது மட்டுமல்லாமல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள்வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து சாப்பிடுவது சால சிறந்தது


