மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது இந்த காய்

 
piles piles

பொதுவாக புடலங்காயை பழங்காலம் தொட்டு சமையலில் பயன் படுத்தி அதை வைத்து விதம் விதமாக சமைத்து உண்டு வந்துள்ளனர் .
புடலங்காயை வைத்து . புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.இந்த புடலங்காய் மூலம் எந்த நோய் வராமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1. புடலங்காய் சாப்பிட்டு வந்தால் விந்துவை கெட்டி படுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
2. சிலர் தேகம் மெலிந்து இருப்பார்கள் .அவர்கள்  அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

3. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  அஜீரண கோளாறு அகன்று, எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

4. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

5. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.

6. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.

7. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது.

8. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும். 9.புடலங்காய் சாப்பிட்டு வந்தால் கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது.

10.. புடலங்காய் சாப்பிட்டு வந்தால்  அதிகம் நீர்சத்து இருபதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

11. புடலங்காய் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.