இஷ்டப்பட்டதை சாப்பிட விடாத வாயு தொல்லையை கஷ்டப்படாம விரட்டும் வழி

 
Gas

வாயுத் தொல்லை இருக்கே வந்தாலும் பிரச்னை. வரலன்னாலும் பிரச்னை. சில பேருக்கு சாப்பிட்டா உடனே வாயுத் தொல்லை அதிகமாகிவிடும். ’ கல்யாண வீட்டுக்குப் போன நிம்மதியா சாப்பிட முடியல, விருந்துக்கு போனா பிடிச்சதைச் சாப்பிட முடியல’ என்று இப்படிநினைப்பவர்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்களாகத் தான் இருப்பார்கள்.

இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால்இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான இயற்கை வைத்தியம் உண்டு, வீட்டில் இருக் கும் பொருள்களைக் கொண்டே வாயுத் தொல்லையை இல்லாமல் செய்து விடலாம்.

வயிற்றில் வாயு தங்க இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. உணவு சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும் போதோ ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் வயிற்றுக்குள் நுழைந்து வாயுத் தொல் லையை ஏற்படுத்துகிறது.

மற்றொரு காரணம் உணவு செரிக்கப்படும் போது வேதி வினையிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக் சைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் வயிற்றினுள் தங்கி விடுகின்றன. இந்த வாயுக்கள் வெளியே றாமல் அப்படியே இருப்பதால் வயிற்றுக்குள் அசெளகரியம் ஏற்படுகிறது.

வாயு கோளாறு ஏற்பட காரணங்கள் :

பசித்த பிறகே உணவு கொள்வது சிறந்தது. அடுத்து பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது காலை உணவு முடித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே சாப்பிட வேண்டும். பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் வாயு உற்பத்தியாகிறது.

வாயு தொல்லை தரும் உணவுகள் :

பால் பொருட்கள எப்பொழுதும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால் அதுவே வாயுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் தயிரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ்  அதிக அளவு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.

 

இன்று வீட்டிலும் அலுவலகத்திலும் சூரியிங்கத்தை வாயில் மென்றவாறு பேசுவார்கள் அல்லது வேலையை பார்ப்பார்கள். சுயிங்கத்தை மென்று கொண்டே இருந்தால் வாயின் வழியாக உடலினுள் காற்று புகுந்துவிடும். இதுவும் வாய்வு பிரச்சினை ஏற்பட காரணமாகின்றது.

கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொண்டால், செரிமானம் மெதுவாக நடைபெற்று உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும். இவ்வாறு நீண்ட நேரம் ஆவதால் வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும்.

எனவே கொழுப்பு  நிறைந்த உணவு, ஜங்க்,  நொறுக்குத்தீனிகள்  சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

gas trouble tips

வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க :

துளசிச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு. தலா மூன்று ஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, காலை, மாலை என இரண்டு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

 

காபி, டீ  இதற்கு பதிலாக  சுக்கு மல்லி காபியை குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப்  பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் நாட்டுச் சர்க்கரையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

புதினா அமில உற்பத்தியைத் தடுக்கின்றது. வாயுவினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்று நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை  வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட வேண்டும். இது வாயுத் தொல்லையை சரி செய்யும். பப்பாளிப் பழம் ஜீரணமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாயுத் தொல்லை குணமாகிவிடும்.

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவ தோடு, இரைப்பையில்  இருந்து வாயுவையும் வெளியேற்றிவிடும்.

வாயுத் தொல்லை, வயிறு உபாதைகளுக்கு, பூண்டு மிகவும் நல்லது. எனவே பூண்டை வறுத்து அல்லது சுட்டு சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். வாய் தொல்லையிலிருந்து விடுபட உணவுடன் பூண்டு ரசம் செய்து சாப்பிடலாம்.,