வெற்றிலை சாறு குடிச்சா ,எந்த நோயை அடிச்சி துரத்தலாம் தெரியுமா ?

பொதுவாக அந்த கால பெரியோர்கள் பலருக்கும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது.அதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்ந்து வந்தனர் ,இப்போது பல்லில் கரை படியும் என்பதால் பலரும் அந்த வெற்றிலை பழக்கத்தை விட்டு விட்டனர் ,அதனால் ஆரோக்கியம் இன்றி இருக்கின்றனர்
இந்த ப்பதிவில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
1.வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் இருப்பதால் இதை மருத்துவ குணத்துக்காக உபயோகப்படுத்தலாம் .
2.வெற்றிலை சீதள நோய்களை நீக்கும் .மேலும் உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
3.வெற்றிலையானது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
4.வெற்றிலை புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.கேன்சர் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது 5.சிலருக்கு ஆஜீரணம் இருக்கும் .வெற்றிலை நம் உடலில் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டும் சக்தி கொண்டது
6.வெற்றிலை தாய்ப்பால் சுரப்பியாகவும் இருக்கின்றது.
7.சிலருக்கு வாய் நாற்றம் இருக்கும் .அதனால் வெற்றிலை வாய்நாற்றத்தையும் போக்குகிறது.
8.சிலருக்கு பல் பிரச்சினை இருக்கும் .வெற்றிலை பற்களை பாதுகாக்கும்.
9.சில முதியோருக்கு ஞாபக சக்தி குறைபாடு இருக்கும் .வெற்றிலை சாறு குடித்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
10.வெற்றிலை மூலம் ஆண்மை குறைபாடு நீங்கும்.
11.வெற்றிலை காம்புடன் பால்,ஏலக்காய் சேர்த்து அரைத்து தலையில் பூசினால் தலைவலி நீங்கும்