கிராம்புடன் தேன் கலந்து சாப்பிட்டால் எந்த பிரச்சனை நம்மை விட்டு ஓடும் தெரியுமா ?

 
clove

கிராம்பு அதிக மருத்துவ குணமடைய ஒரு பொருளாகும் .மேலும் கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெய்யை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவந்தால் அந்த பல் பிரச்சினைகளை ஓட ஓட விரட்டலாம்

மேலும் சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.மேலும் தொண்டை அடைப்பும் குணமாகும் .

kirambu

ஆஸத்மாவால் மூச்சு விட அவதிப்படுவோர் கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட அந்த ஆஸத்மா பிரச்சினை ஓடி விடும்

ஆஸத்மா நோயாளிகள் கிராம்பை எப்படி சாப்பிடவேண்டுமென்றால் முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா நம்மை விட்டு பல மைல் தூரம் ஓடிவிடும் .

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.மேலும் ஜீரண சக்திக்கும் கிராம்பு சிறந்த பொருள்

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலராவால் வந்த வயிற்று போக்கு குணமடையும்.