"பேராண்டி, நல்லெண்ணைய எப்படியெல்லாம் யூஸ் பண்ணா உங்க தாத்தா மாதிரி நூறு வயசு வாழலாம்னு சொல்றேன் கேளு"
எள் என்பது உலகின் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு தானிய வகையாக இருக்கிறது. பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட எள் தானியங்களை பயன்படுத்தி பல உணவு வகைகள் தயார் செய்து உண்ணப்படுகின்றன. அந்த எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் நல்லெண்ணெய் எனப்படுகிறது. உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர்.முதுமை காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்குகிறது. கோடைக்காலங்களில் நல்லெண்ணெயை சிறிது எடுத்து கைகளில் மேற்புறமாக சிறிது தடவிக் கொள்வதால் கடுமையான சூரிய வெப்பத்தால் தோலுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது. மேலும் வியர்வை மற்றும் இன்னபிற தொற்றுக்கிருமிகளால் தோல் வியாதிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்ததோடு சரி, அதை பலரும் கண்டுகொள்ளாமல் கூட இருக்கின்றனர். ஆனால் நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்களும், அற்புதங்களும் தெரிந்தால் அதை அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள். ஆயில் புல்லிங் என்று சொல்லப்படும் ஒரு வைத்திய முறைக்கு நல்லெண்ணையை பயன்படுத்துகின்றனர். நல்லெண்ணெய்யை வாயில் வைத்து 20 நிமிடம் கொப்பளித்தால் இதயத்திற்கு நல்லது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நல்லெண்ணெயில் இருக்கும் லெசித்தின் என்கிற மூலப்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், இதயம் பலப்படவும் உதவி செய்கிறது. இதயத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை படிய விடாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நல்லெண்ணெயில் இருக்கும் லினோலிக் அமிலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் செய்கிறது. எள்ளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் ஜிங்க் சத்து அதிகம் இருப்பதால் தோலில் ஜவ்வு தன்மையை நீட்டிக்கச் செய்கிறது. இதனால் எப்போதும் இளமையான தோற்றப் பொலிவு பெறுவதற்கு நல்லெண்ணையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நலம் தரும். சிலருக்கு ஒற்றைத் தலைவலியால் அதீதமான அவஸ்தை ஏற்படும். அந்த சமயத்தில் நல்லெண்ணெய்யில் கொஞ்சம் பூண்டு மற்றும் மிளகை தட்டி போட்டு காய்ச்சி ஆறிய பின்பு தலைக்கு தேய்த்து குளித்துப் பாருங்கள், நீண்ட நாள் ஒற்றை தலைவலியும் காணாமல் போய்விடும். குளிர்காலங்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு நல்லெண்ணெய் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்
முதன் முறையாக பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்க வேண்டும். ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகள் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அந்த அளவிற்கு குளிர்ச்சி மிகுந்த இந்த நல்ல எண்ணெய் தோல் பளபளப்புக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும், உடல் உறுப்புகள் நன்றாக செயல்படவும் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.


