வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் பெரும் நன்மைகள் என்ன தெரியுமா ?

 
water

பொதுவாக குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் .மேலும் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும்தண்ணீரை குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.அதனால் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மை பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

water

1.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலின் மூலைமுடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.

2. வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் விரைவில் பசி எடுக்க ஆரம்பித்து,உடல் ஆரோக்கியம் பெரும் .

3.வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுத்து நமக்கு ஆரோக்கியம் பெரும் 

4.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலானது சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

5. தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.

6.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

7.சிலர் உடல் எடைஅதிகம் இருப்பர் .எடை  குறைக்க விரும்புபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், நச்சுக்கள் வெளியேறி எடை குறையும் 

8.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

9.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10.வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் , நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.

11.தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது.