நரம்பு சுருட்டல் நோய் வர நாலு காரணங்கள்

 
vericose vericose

பொதுவாக பரம்பரையில் யாருக்காவது நரம்பு சுருட்டல் நோயிருந்தால் அவர்களின் சந்ததியினருக்கு இது ஏற்பட வாய்ப்புள்ளது .மேலும் பரம்பரையில்லாமலும் இந்த நோய் ஏற்படும் .இந்த நோய் வராமல் தவிர்க்க கிராமத்தில் பாட்டிகள் அமர்ந்திருப்பது போல அடிக்கடி கால்களை நீட்டி அமர வேண்டும் .இப்படி அமர்வோருக்கு பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம் .மேலும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் கால்களை மடக்கி அமர பழகி கொள்ளுங்கள் .இதற்க்கு கேரட் மற்றும் கற்றாழை மற்றும் வினிகர் கொண்டு மூன்றையும் மிக்ஸ் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பேஸ்ட் போல பூசி வர குணமாகும் .மேலும் இந்த நோய் பற்றி பல புதிய தகவலை பார்க்கலாம்

1. மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள் .மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுவதால் இந்த நோய் உண்டாகிறது

toilet

2.நரம்பு சுருட்டல் நோய்க்கு  ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வோருக்கும் , ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்போருக்கும்  இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவதுக்கூட இந்நோய் வருவதற் கான முக்கிய காரணமாகும்.

3.நரம்பு சுருட்டல் நோய்க்கு இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் .

4.நரம்பு சுருட்டல் நோய்க்கு அடுத்த காரணமாக பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளதும் ஒரு காரணம்