வாழைப்பூவை அரைத்து குடித்து வந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
vazhai poo

வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழை பூ நம் உடலுக்கும் குடலுக்கும் நிறைய நன்மைகளை வாரி வழங்குகிறது .பொதுவாக பூக்கள் என்றாலே அது மனித குலத்தின் நோய்களை தீர்க்க இறைவனால் படைக்கப்பட்டது எனலாம் .அதிலும் வாழைப்பூக்கள் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து .இதனுள் இருக்கும் சிறிய இதழை பொறித்து சாப்பிட இன்சுலின் அதிகமாக சுரக்க வைக்கும் .ரத்த மூலம் ஏற்பட்டவர்கள் இதை வாரமிருமுறை சாப்பிட்டால் குணமாகும் .உடல் சூடு காரணமாக வரும் வயிற்று போக்கு ,வயிற்று கடுப்பு போன்றவற்றுக்கும் இந்த பூ நிவாரணம் கொடுக்கும் ,இந்த பாஸ்ட் புட் மூலம் வரும் அஜீரண கோளாறு ,மற்றும் பெண்களுக்கு வரும் வெள்ளை படுதல் போன்ற பிரச்சினைக்கும் இது நல்ல மருந்து.மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம் 

1.வாழைப்பூ பெண்களுக்கு உண்டாகும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சீர் செய்ய உதவும் .

2. வாழைப்பூவில் இருக்கும் பெரிய இதழை  நீக்கி விட்டு அதனுள் இருக்கும் சிறிய உதிரிப் பூக்களை அரைத்து குடித்து வந்தால் ,மாதவிடாயின் போது உண்டாகும் அதிக இரத்தப் போக்கு பிரச்சனை தீரும்.

3.இந்த வாழைப்பூவின்   உதிரிப் பூக்களை  ஒரு டம்ளர் தண்ணீரில் அரைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் மாதவிடாய் சுழற்சி நடைபெறும் நாளிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடித்தால் அதிக ரத்தப்போக்கு குறைந்து நிம்மதியாக மாத விடாய் நாட்களை கழிக்கலாம் .