வசம்பை தேனில் கலந்து சாப்பிட்டால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
honey

பொதுவாக கிராமத்தில் உள்ள பாட்டிகள் வைத்தியத்தில் அடிக்கடி பயன் படும் ஒரு பொருள் எதுவென்றால் அது வசம்புதான் இந்த வசம்பை வைத்து கொண்டு கிராமத்து பாட்டிகள் பல நோய்களை குணப்படுத்துவது உண்டு .இந்த பதிவில் வசம்பு மூலம் குணமாகும் நோய்கள் பற்றி நாம் பாக்கலாம்

1. நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது ஆரோக்கியம் தரும் வசம்பைத் தான்.

2.கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

3.இந்த வசம்பு கலந்த பாலை குடிப்பதால்  குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது.

4.சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கொடுத்து ,அதை கிருமிநாசினியாக நாம் எப்போதும்  பயன்படுத்தலாம்.

5.இந்த வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் ஓடி விடும் 

6.இந்த ஆரோக்கியம் மிகுந்த வசம்பு  எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

7. வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு கொடுத்தால் உடனேயே நிவாரணம் கிடைக்கும்

8.வசம்பை இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் குடலிலுள்ள விஷம் வெளியே வந்து விடும்.

9.இந்த வசம்பு கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

10.இந்த வசம்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்பட்டு ஆரோக்கியம் கொடுக்கும் .

11.இதனாலேயே இந்த வசம்பை   பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.