வாய்நாற்றம் போன்ற பிரச்சினை நீங்கும் இந்த இலைமூலம்
பொதுவாக துளசி மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தி விட முடியும் .அதனால்தான் பல வீடுகளில் நம் முன்னோர்கள் துளசி செடியை வளர்த்து வந்தனர் .
துளசி தமிழ் மருத்துவத்தில் எண்ணற்ற நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. “மூலிகைகளின் அரசி” எனப்படும் “துளசி”.இந்த துளசியை எப்படி சாப்பிட்டால் எந்த நோய்களை குணப்படுத்த முடியும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .
1.பொதுவாக துளசி சளிக்கு நல்லது. அனைத்து காய்ச்சல்களுமே துளசிக்கு கட்டுப்படும். .
2.தினமும் துளசி இலைகளை மென்று தின்று வந்தால் சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் அந்த ஆற்றல் துளசிக்கு உண்டு எனலாம்
3.மேலும் ஆரோக்கியம் மிகுந்த துளசி இலையை எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் அரைத்து தோல் நோய்களுக்கு பற்று போட அந்த நோய்கள் குணமாகும்
4.துளசி இலை அரைத்த விழுதுடன் வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் தேமல் மறைந்து ஆரோக்கியம் பிறக்கும்
5.துளசி செடி இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும், கொசுக்களும், தீய சக்திகளும் அண்டாது.
6.துளசியை செம்பு பாத்திரத்தில் போட்டு 8 மணிநேரம் ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7.மேலும் இந்த துளசி இலைகளை கழுவி மென்றும் சாப்பிடலாம்.
8. துளசி இலைகளை கழுவி மென்று சாப்பிட்டால் வாய்நாற்றம் போன்ற பிரச்சினை நீங்கும்.
9.காற்றிலுள்ள புகையை சுத்திகரிக்கும் தன்மையும் கொண்டது இந்த துளசி.
10.துளசி மற்ற தாவரங்களை விட அதிகளவில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை கிரகித்து ஆக்சிஜனை வெளியிடும் சக்தி கொண்டது


