துளசி சாறுடன் ஆடாதோடை இலைச் சாற்றையும் கலந்து கொடுத்தால் எந்த நோய் விலகும் தெரியுமா ?

 
cold

பொதுவாக வீட்டில் வளர்க்க பல நூறு செடிகள் இருந்தாலும் ஒரே ஒரு துளசி செடி வீட்டில் வளரத்தால் அந்த வீடே நோயில்லா ஆரோக்கியமான வீடாக மாறி விடும் .அதனால்தான் துளசியை மூலிகைகளின் அரசி என்று அழைக்கின்றனர் .இந்த துளசி செடி நம் உடலுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் செய்யும் பணி மகத்தானது .இது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றும் அற்புத பணியினை செய்கிறது .அதனால்தான் ஜப்பானியர்களே இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளனர் .இந்ததுளசி செய்யும் அற்புத பணியை பட்டியலிட்டுளோம்

1.துளசி சாறு காய்ச்சலின் கடுமையை தனித்து ,நம் ஆரோக்கியத்துக்கு வழி செய்கிறது .

tulsi

2.துளசி சாற்றை ஆடாதோடை இலைச் சாற்றையும் கலந்து இரண்டு மூன்று வேளை உட்கொண்டால் முற்றிய ஜலதோஷம் கூட நீங்கி நம் நலன் காக்கும் 

3.துளசி சாறு பெரியவர்களுக்கு மட்டுமில்லை குழந்தைகளின் வயிற்று நோயை தீர்க்க கூடிய ஆற்றல் கொண்டது .

4.துளசியை எலுமிச்ச பழ சாற்றில் அரைத்து பூசினால் படை போன்ற சரும நோய்கள் இருக்குமிடம் தெரியாமல் போகும் 

5.துளசி சாற்றில் தேன் கலந்துபயன் படுத்தினால்   கண்நோய்களை குணமாக்கும்.

6.துளசி பூ, காம்புகள், சுக்கு ஆகியவற்றை அரைத்து அந்த சாற்றில் தேன் கலந்து கொடுத்தால் பாம்புக்கடி விஷம் உடனே இறங்கி உயிர் பிழைக்க வைக்கும் .

7.துளசி விதைகளை அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். துளசி இலை, பூ, வேர் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது ,நம் நோய் தீர்க்கும் சக்தி கொண்டது .