பல வருட பல்வலியை பத்தே செகண்டில் சரி செய்யும் வழி

 
teeth

உலகில் பிரசவ வலியையே தாங்கி கொள்ளலாம் ஆனால் இந்த பல்வலி அதை விட கொடுமையானது என்று பல்வலி வந்து அவதிப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் .அந்தளவுக்கு அது மரண அவஸ்தையை கொடுக்கும் .இந்த பல்வலி வந்து விட்டால் சரியாக பேச முடியாது ,சாப்பிட முடியாது கூடவே தலைவலியும் சேர்ந்து கொண்டு நரக வேதனையை கொடுக்கும் .அப்படிப்பட்ட பல் வலிக்கு ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து  பல்லில் வைத்து கொண்டால் சரியாகும் .பல் வலிக்கு புதினா இலைகளை பல் வலி வந்த இடத்தில் வைத்தால் உடனே பலன் கிடைக்கும் .மேலும் இஞ்சியை கூட பல்வலிக்கும் இடத்தில் வைத்து நிவாரணம் காணலாம் .மேலும் கொய்யா இலையை கூட சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்

teeth

கிராம்பு மூலம் பல் வலியை எளிதில் குணப்படுத்த முடியும். இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் 

ஒருவருக்கு நீண்ட நாட்களாக பல் வலி இருந்தால் எளிதாக இயற்கை பற்பொடியை பின்வருமாறு தயாரித்து தினமும் உபயோகித்து வர குணம் கிடைக்கும்

வேலம்பட்டையை வெயிலில் நன்கு காயவைத்து அதில் ஒரு முப்பது கிராம் எடுத்துக்கொண்டு அதோடு மென்தால் மற்றும் ஆறு கிராம்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அப்படி அரைத்து கிடைக்கும் பொடியை பல் துலக்க பயன்படுத்திடலாம்