சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் வைத்தால் என்ன நன்மை தெரியுமா ?

 
tooth tooth

பொதுவாக பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு .அந்தளவுக்கு பல்வலி கொடுமையானது ஆகும் .இந்த கொடுமையான பல்வலிக்கு சில இயற்கை தீர்வுகள் உண்டு .
உதாரணமாக நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை செய்து வந்தால் பல் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது.இதே போல் மேலும் பல்வலிக்கான சில டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்  

1.பல்வலி உள்ளோருக்கு தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது .
2.அடுத்து கொடுமையான பல்வலிக்கு நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவ பல்வலி பறந்து போகும் 
3.பல்வலி உள்ளோருக்கு  கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. 
4.பல்வலியை போக்கும் வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால், தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.
5.நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், முதலில் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும் 
6.பின்னர் துண்டு இஞ்சியை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர, பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.
7.பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து சிகிச்சை அளிக்கலாம்  
8.அந்த சூடான டீ பேக்கை ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.
9.தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்தி நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது  
10..அடுத்து பல்வலியை குணமாக்க காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.