சுகரை கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை வீட்டுக்குள் சேர்க்காதிங்க

 
sugar

சர்க்கரை நோய் இப்போது உலகளவில் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது .இந்த 200 mg அளவுக்கு வரும்வரை வெளியே தெரிவதில்லை .அதன் பிறகுதான் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் ,இந்த நோய் ஒருவரின் பார்வை திறனை பாதிக்கும் ,மேலும் மாரடைப்பு ,சிறுநீரக கோளாறு போன்றவற்றையும் கொண்டு வரும் அபாயமான நோய் இது 

ஒரு சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் சுகரை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   

sugar

1.சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வெள்ளை பிரெட் மற்றும் பாஸ்தா போன்ற உணவு வகைகளில் குறைந்த அளவே நார்ச்சத்தும், அதிகளவில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளதுஇவற்றை தவிர்க்கலாம்  இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுவதால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.  

2.சுகரை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க செயற்கையான சுவையூட்டப்பட்ட தயிரை தவிர்க்கலாம் . இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதில் நிறைந்துள்ள அதிகமான சர்க்கரை உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து ஆபத்தை உண்டு பண்ணும் 

3.சுகரை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க செயற்கையான நிறமிகள் கலந்து சுவையூட்டப்பட்ட காபியை விடணும் .இதை குடிப்பது விரைவில் ரத்த சர்க்கரையை உயர்த்தும். இந்த பானத்தில் அதிகளவு சர்க்கரை நிரம்பியுள்ளதால் இதை விட்டு விடுங்கள்

4.சுகரை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள் .இதில்  கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது, இதனை நீரிழிவு நோயாளிகளில் சாப்பிடாமல் கண்டிப்பாக தவிர்த்தால் ஆரோக்கியம் சிறக்கும் . 

5.சசுகரை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சர்க்கரை சேர்க்கப்படும் பழச்சாறுகளை நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்த்துவிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது