நீரிழிவு நோயாளியை நிம்மதியாய் இருக்க செய்யும் இந்த இலை சாறு

 
arasa maram health tips

பொதுவாக விநாயகர் கோவில்களில் இருக்கும் அரச மரத்து இலைகளில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது .அதற்குள் அடங்கியிருக்கும் எண்ணற்ற சத்துக்கள் அதை சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது .சளி மற்றும் காய்ச்சல் ,ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு இதை அரச மர இலைகளின் சாறை பாலில்கலந்து குடித்தால் குணமாகும் ,மேலும் கண் வலி ,பாம்பு கடி ,பல் ஆரோக்கியம் ,கல்லீரல் பாதுகாப்பு ,மல சிக்கல் ,இதய ஆரோக்கியம் ,வயிற்று போக்கு போன்ற நோய்களுக்கும் இது சிறந்த மருந்து

Lung

அரச மர இலைகள் நுரையீரலுக்கு நன்மை பயக்கும். அரச மர இலைகளின் சாறு நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க சிறப்பாக வேலை செய்கிறது. இந்த ஜூஸை குடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் அழற்சி பிரச்சனையும் நீங்கும். சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அரச மர இலைகளின் சாற்றை குடிப்பதன் மூலமும் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம்.

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. அரச மர இலைகளில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. அரச மர இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.

அரச மர இலைகளில் உள்ள பண்புகள் இருமலை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இதன் சாற்றை உட்கொள்வதால் இருமல் பிரச்சனை நீங்கும். இந்த ஜூஸை குடிப்பதால் சளி பிரச்சனையும் நீங்கும்.