48 நாள் செவ்வாழை சாப்பிட்டால் 49ம் நாள் உடலில் நேரும் மாற்றம்

 
sevvazhai

பொதுவாக எளிதாகவும் ,மலிவாகவும் கிடைக்கும் பழம் எதுவென்றால் அது வாழைப்பழம்தான் .இந்த பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் .அதிலும் செவ்வாழை பழம் சாப்பிட்டால் அதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நமக்கு ஆரோக்கியத்தை வழங்கும் .இந்த செவாழை பழம் சிறுநீர் கற்கள் வராமல் பாதுகாக்கும் ,மேலும் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலுவாகும் ,எனவே எலும்புகள் எப்போதும் எந்த வயதிலும் உறுதியாக இருக்க நினைப்போர் இந்த பழம் சாப்பிடலாம் .மேலும் இது இம்மியூனிட்டி பவரை கொடுக்கும் .மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குரைப்புக்கும் வழி செய்யும் .மேலும் இந்த பழம் மூலம் நாம் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

 

1.சிலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பர் ,அவர்கள்  தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர அந்த பாதிப்பு குணமாகும்

2.தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடைந்து உடலுக்கு ஆற்றல் பெருகும்

3.சிலர் மாலைக்கண்நோய் வந்து அல்லல் படுவர் ,இப்படி மாலை கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

4.சிலர் பல் நோயால் பாதிக்கப்பட்டு அல்லல் படுவர் ,இப்படி பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்