சப்ஜா விதைக்குள் இவ்ளோ சமாச்சாரம் இருக்கா ?

 
sapja

திருநீற்று பச்சிலையிலிருந்து எடுக்கப்படும் சப்ஜா விதைகளில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .பலூடா விதை என்றழைக்கப்படும் இது நம் உடலில் எடை குறைப்பு முதல் சர்க்கரை நோய் வரை காணாமல் போக செய்யும் .இந்த விதைகள் மூலம் பின் வரும் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது

1.உடல் எடையை  குறைக்கிறது.- இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு மற்றும் நார்சத்து உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைகிறது

sapja

2.மலச்சிக்கலை போக்கும்.-இது மலச்சிக்கலை போக்குவதுடன் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று கடுப்பு போன்ற உடல் உபாதைகளை போக்குகிறது

3.உடல் சூட்டை தணிக்கும்.

4.வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற்றும்.

5.இது நீரிழிவை கட்டுப்படுத்தும்.

6.இது கொழுப்பை குறைக்கும்.

1.சப்ஜா விதையில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் உடல் எடையைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

2.சப்ஜா விதை பெண்களின் மாதவிடாய், வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊற வைத்த சப்ஜா விதையை ஒரு தேக்கரண்டி பாலிலோ அல்லது தேனிலே கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

3. முதல் நாள் இரவில் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சர்க்கரை நோயாளிகள் ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை காணலாம்.