கிட்னி கெடாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
பொதுவாக ஒருவருக்கு கிட்னி கெடாமல் பாதுகாக்க அதில் கல் உருவாவதை தடுக்க வேண்டும் .இதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சில கர்ப்பிணிகளுக்கு உடலில் நீர்ச்சத்து இழப்பினால் பாதிப்பு ஏற்படும் .இதை தவிர்க்க கர்ப்பிணிகள் இளநீர் அருந்தவேண்டும்.
2.கர்ப்பிணிகள் இளநீர் குடிப்பது மலச்சிக்கலையும் நீக்கும்.
3.மேலும் கர்ப்பிணிகளின் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மயக்கம், நெஞ்செரிச்சல் ஆகிய உபாதைகளை இளநீர் குணப்படுத்தும்.
4.ஆகவே, கர்ப்பிணிகள் இளநீரை அதிகமாக அருந்தஅவர்களின் ஆரோக்கியம் மேம்படும்
5. மேலும் ஒருவர் அதிக அளவு திரவங்கள், பானங்களை அருந்திவர வேண்டும் .இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் தடுக்கலாம். சாதாரண தண்ணீரே போதுமானது.
6.பொதுவாக நம் உடலில் சிறுநீரக கற்கள் கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய கூட்டுப்பொருள்களால் உருவாகிறது.
7.இந்த கால்சியம், ஆக்ஸலேட் படிகமாகி சிறுநீரில் கற்களாக மாறுகின்றன.
8.எலிகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இளநீரானது ,இந்த படிகங்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது.
9.மேலும் சிறுநீரில் படிகங்கள் உருவாகும் எண்ணிக்கையையும் இளநீர் தடுக்கிறது.
10.அது மட்டுமல்லாமல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை இளநீர் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
11.இளநீரில் மெக்னீசியம் உள்ளது. அது நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு உடலில் இன்சுலினை உணரும் திறனை ஊக்குவித்து நீரிழிவு பாதிப்பை குறைக்கும்..


