பெருஞ்சீரகத்தை காய்ச்சி குடிச்சா ,எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா?

 
fat

நம் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பை குறைக்க வேண்டுமென்றால் நாம் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகத்தை ஜூஸாக எடுத்து கொள்ள வேண்டும் .மேலும் பெருஞ்சீரக விதைகள் நம் சாப்பாட்டுக்குப் பிறகு அண்ணத்தை சுத்தப்படுத்தவும் புத்துணர்ச்சியடையவும் செய்கிறது .மேலும் சிலருக்கு தீராத மலசிக்கல் வந்து பாடாய் படுத்தும் .அந்த நேரத்தில் இந்த பெருஞ்சீரகத்தை எடுத்து கொண்டால் அது அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டது மேலும் அது புற்று நோய் செல்களை அழிப்பதோடு ,கண்ணை பாதுகாக்கிறது .மேலும் நமக்கு ஏற்படும் சுவாச பிரச்சினையை கூட குணப்படுத்துகிறது

sombu

 

பலருக்கும் பல சமயங்களில் சாப்பிட்ட உடன் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அவர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது . மேலும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிறு உப்பிபோதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகி இம்சை கொடுக்கிறது . இந்த இக்கட்டான  சமயங்களில் பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும் .அதை , சற்று இதமான சூட்டில் அந்நீரை வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல பலன் உடனே கிடைக்கும்

டிசம்பர் மாத குளிர்காலங்களில் சிலருக்கு வீசிங் பிரச்சினை ஏற்பட்டு அவர்களை மூச்சு விடாமல் செய்கிறது .அந்த நேரத்த்தில் இந்த பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து குடித்தால் அந்த பிரச்சினை சரியாகும்