வியாதிகளை விரட்டும் வெங்காய தோல் தலையணை செய்யும் முறை

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் நிறைவு பெறாது இந்நிலையில் வெங்காயத்தை சமைத்து விட்டு அதன் மூலம் கிடைக்கும் வெங்காய தோல் நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது .இந்த வெங்காய தோலை சேகரித்து வைத்து அதை செடிகளுக்கு உரமாக போட்டால் நன்றாக வளரும் .பலருக்கு அலர்ஜி பிரச்சினை இருக்கும் .அதை போக்க வெங்காய தோல் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும் .இந்த வெங்காய தோலை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள் பின்னர் சில மணி நேரம் கழித்து அந்த நீரை அலர்ஜி உள்ள இடங்களில் பூசி வந்தால் அந்த அலர்ஜி ஓடி விடும் .வீட்டில் பூச்சிகள் தொல்லை இருந்தால் இந்த வெங்காய தோலை கதவோரத்தில் வைத்தால் அந்த பூச்சிகள் வராது

onion thol benefits

வெங்காயம் மற்றும் பூண்டு தோல் கொண்டு செய்யப்படும் தலையணைகள் இருக்கையில் போட்டு அமரும் பொழுது ஏராளமான நன்மைகள் நமக்கு நடப்பது உண்டு. எனவே வீட்டில் வேண்டாம் என்று குப்பையில் இனி வீசக்கூடிய இந்த வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோலை எந்த அளவிற்கு அதிகமாக சேர்க்க முடியுமோ, அந்த அளவிற்கு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இது போல பில்லோ செய்து உள்ளே வெங்காய தோலை திணித்து அதை நன்கு நவீன தலையணையாக தைத்து அதை இருக்கையில் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

இதில் வெங்காயத் தோல் தலையணையில் அமரும் போது உடல் சூடு என்பது முற்றிலுமாக தணிந்து குளிர்கிறது. இதனால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது