நித்திய கல்யாணி பூவின் சக்தி தெரியுமா ?

 
nithya kalyani

நித்திய கல்யாணி செடிகள் மலைப்பாங்கான இடத்திலும் ,விவசாய இடத்திலும் அதிகம் காணப்படும் .இந்த செடியின் பூக்கும் பூக்கள் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .இது சர்க்கரை நோய் முதல் பெண்களின் மார்பக புற்று நோய் வரை தீர்க்கும் அருமையான மருந்து தயாரிக்க பயன் படுகிறது .சித்த மருத்துவ நூல்களில் இந்த நித்தியா கல்யாணி பூக்களின் அருமை பெருமைகளை சித்தர்கள் எழுதியுள்ளனர் .

இந்த நித்ய கல்யாணி பூக்கள் சிவற்றுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட கட்டுக்கடங்காத சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும் ,மேலும் இது புற்று நோய்க்கும் சிறந்த மருந்து .இதன் பூக்கள் போல இதன் இலைகளும் நமக்கு நன்மைகள் புரிகிறது .இந்த இலைகளை பறித்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் போல் தயாரித்து ஆறாத புண்கள் மீது பூசினால் அந்த புண்கள் ஆறிவிடும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

1.நித்திய கல்யாணியின் இலைகள் மற்றும் பூக்கள் ரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன.

2.நித்திய கல்யாணியின் இலைகள் மற்றும் பூக்கள் தோல் பிரச்சினையை நீக்குகிறது.

3.நித்திய கல்யாணியின் இலைகள் மற்றும் பூக்கள்,பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.

4.நித்திய கல்யாணியின் இலைகள் மற்றும் பூக்கள் மனநோயை குணப்படுத்த உதவும்.

5.நித்திய கல்யாணியின் இலைகள் மற்றும் பூக்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகப்படுத்தும். .