தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடித்தால் எந்த பார்ட் பலம்பெறும் தெரியுமா ?

 
pattai

சித்த வைத்தியத்தில் அதிகமாக பயன்படும் பொருட்கள் எதுவென்றால் இலவங்கப்பட்டையும் ,தேனும் தான் ,இந்த இரண்டு பொருட்களை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து சாப்பிட்டால் பல நோய்கள் நம்மை விட்டு ஓடிப்போய் விடும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர் .குறிப்பாக இதய நோய்கள் நம்மை விட்டு விலக இந்த இரண்டு பொருட்களை கலந்த கலவை உதவும் .மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சினையிருப்போரும் இந்த தேனையும் இலவங்க பட்டை தூளையும் கலந்து சாப்பிட கொழுப்பு கரையும் .மேலும் ஜலதோஷம் மற்றும் மூட்டு வலியால் அவதி படுவோர் இந்த கலவையை உண்டால் அந்த பிரச்சினை விரைவில் தீரும் .மேலும் சில ஆரோக்கிய குறிப்புகளை பார்க்கலாம்

tea shop

1.தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்பு பிரச்சனை வராமல் காக்கும்

2.சிலருக்கு நரம்பு கோளாறுகள் இருக்கும் .அவர்கள் 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

3.பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்து கொள்ள ஆரோக்கியம் மேம்படும்

4. எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க நரம்பு முதல் உடலுறுப்புகள் பலம் பெரும் .