முசுமுசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
greens

பொதுவாக ஒருவருக்கு ஆஸ்துமா நோய் வந்து விட்டால் மூச்சு விட சிரமப்படுவதுண்டு .மேலும் இந்த ஆஸ்துமா குணமாக இயற்க்கை வைத்தியத்தில் என்ன சிகிச்சை கொடுக்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம்

1.ஆஸ்துமா நோய் இருப்பது தெரியவந்தவுடன் உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

asthma

2.ஆஸ்துமா நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

3.பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு, இந்த பத்தையும் ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்துமா வெகு விரைவில் குணம் ஆகும்.

4.மேலும் முசுமுசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார்.

5.மேற்கூறிய மூலிகை தேனீரை  தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிட  மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.

6. அடுத்து மிளகு கல்பம் பற்றி பார்க்கலாம் .காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு  மிளகு கல்பத்தை 1/2 கிராம் தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

7.அடுத்து பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம் பற்றி பார்க்கலாம் இந்த இரண்டையும்  காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட ஆஸ்துமா குணமாகும் .

8. ஆஸ்துமா குணமாக பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

9.ஆஸ்துமா குணமாக வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.