புதினா இலைகளை தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்

 
honey

நாம் பொதுவாக புதினாவை சமையலில் வாசனைக்கு மட்டுமே பயன் படுத்தி வருகிறோம் .ஆனால் இந்த புதினாவை நாம் மருந்து போல பயன் படுத்தினால் எத்தனை விதமான நோய்கள் நம்மை அண்டாது என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் .புதினா எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து விடும் .மேலும் ஒவ்வாமை ,பல் வலி ,சளி தொல்லை ,சுவாச கோளாறு ,செரிமான கோளாறு போன்ற நோய்களை இந்த புதினா குணப்படுத்தும் .ஆஸ்த்மா நோயுள்ளவர்கள் தங்களின் நுரையீரலை பலப்படுத்த இந்த புதினாவை பயன் படுத்தலாம் .வயிற்று போக்கு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினையுள்ளவர்கள் புதினாவை சாப்பிடலாம் .மேலும் ஒற்றை தலைவலி ,வாய் துர்நாற்றம் ,வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த புதினாவை உபயோகப்படுத்தலாம் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

mint

:

1.வாய் சுகாதாரம் மேம்படுவதற்கு புதினா ஓர் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. காலை வேளைகளில் புதினாவை தண்ணீரில் கழுவி, மென்று சாப்பிட்டு வந்தால் ஒரு சில நாட்களிலேயே வாய் துர்நாற்றம் நீங்கும்.

2.வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும் போது, புதினா இலைகளை சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி ஏற்படாமல் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3.மாதவிடாய் தாமதமாக வரும் பிரச்சனை உள்ள பெண்களுக்கு புதினா நல்ல தீர்வு தரும். புதினா இலைகளை காயவைத்துப் பொடியாக செய்து தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்