30 வயதுக்கு பிறகு கர்ப்பமாகும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து

 
child eat

பெண்களை அதிகமாக தாக்கும் நோய்களில் முக்கியமானது மார்பக புற்று நோய் .பெண்கள் அதை மாமோகிராம் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலலாம் ,ஆனால் கட்டியாக தோன்றுவது எல்லாம் புற்று நோய் கட்டியல்ல .இதை தகுதி வாய்ந்த மருத்துவர் சோதனை மூலம் கண்டறிவார் .மேலும் பலர் லேட்டாக நோய் முற்றிய நிலையில் மருத்துவரிடம் செல்வதால் குணப்படுத்த கால தாமதம் ஆகிறது

சில செயல்களை உங்களின் அன்றாட வழக்கமாக்கிக் கொள்வது உங்களை மார்பக புற்றுநோய்   வராமல் பாதுகாக்கும்.

breast cancer

1.பெண்கள் மார்பக கேன்சர் வராமலிருக்க எடையை கட்டுக்குள் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு.

2.பெண்கள் மார்பக கேன்சர் வராமலிருக்க அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கக்கூடாது மற்றும் அதிக உப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.  

3.பெண்களுக்கு  மார்பக கேன்சர் வராமலிருக்க உங்கள் தினசரி அட்டவணையில் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

4.

பெண்களுக்கு  மார்பக கேன்சர் வராமலிருக்க  30 வயதிற்குள் குறைந்தபட்சம் ஒரு கர்ப்பத்தையாவது பெற்றிருக்க வேண்டும்.

5.பெண்களுக்கு  மார்பக கேன்சர் வராமலிருக்க தாய்ப்பால் கொடுக்க வேண்டும் .இது மார்பகப் புற்றுநோய்க்கு பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. மேலும் இது குழந்தைக்கும் தாய்க்கும் ஊக்கமளிப்பதால் அதனை தவிர்க்க கூடாது. 

6.உடல் ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வது அல்லது உட்கொள்வது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். கருவுறாமை சிகிச்சை, கருப்பை தூண்டுதல், மாதவிடாய் நின்ற பின் ஹார்மோன் மறுவாழ்வு ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் விஷயங்களாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .