கொண்டை கடலையை ஊற வச்சி சாப்பிட்டா ,எந்த நோயிலிருந்து வாழ வச்சி காக்கும் தெரியுமா ?

 
kondai kadalai

நம் முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு உணவிலும் உடலுக்கு தேவையான சத்துக்களும் ,நோய்களை குணப்படுத்தும் பண்புகளும் நிறைய உள்ளன ,அந்த வகையில் இன்று நாம் கொண்டை கடலை சாப்பிட்டால் நம் உடலில் குணமாகும் நோய்களை பற்றி பார்க்கலாம் .ஊற வச்ச கொண்டை கடலையை சாப்பிடுவதால் நமக்கு இதய நோய் பாதிப்பு நீங்குகிறது .மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது ,மேலும் வெள்ளை கொண்டை கடலையை பொடி செஞ்சி சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு விலகும் .மேலும் சிறுவர்களுக்கு நல்ல நினைவு திறனை அதிகரிக்கும் பல வேதி பொருட்கள் இதில் அடங்கியுள்ளது அதனால் மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது ,மேலும் இது ரத்த சோகை நோயும் ,கேன்சர் நோயும் வராமல் நம்மை பாதுகாக்கிறது ,மேலும் இந்த கொண்டை கடலையில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்

kidni

1.கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து வளமான அளவில் உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது

2.கொண்டைக்கடலையில் நார்சத்து நிறைந்துள்ளதால் கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

3.மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள், கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.