நம் கிட்னியை இமை போல காக்கும் இந்த தண்டு

 
kidney

வாழை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே நம் ஆரோக்கியத்துக்கு சிறப்பு சேர்க்கும் .அதில் வாழைத்தண்டு நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .இந்த வாழை தண்டை பொரியல் செய்து சாப்பிடலாம் ,ஜூஸ் போட்டும் குடிக்கலாம் .இவ்வாறு குடித்தால் நம் சிறுநீரக பாதை முதல் சிறுநீரகம் வரை கற்கள் உருவாகாமல் தடுத்து மிக்க ஆரோக்கியம் பெரும் .மேலும் இந்த தண்டு நம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் .அது மட்டுமல்லாமல் நம் ரத்த அழுத்தம் முதல் நீரிழிவு நோய் வரை வராமல் தடுக்கும் .ரத்தசோகையை குணப்படுத்தும்!,நெஞ்செரிச்சலைப் போக்கும்!வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்,மலச்சிக்கலைப் போக்கும்,எடையை குறைக்கும் ,மேலும் நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும்.மேலும் கிட்னிக்கு வாழை தண்டு கொடுக்கும் சில நன்மைகளை பார்க்கலாம் 

vazhai thandu

1.மலிவில்  கிடைக்கக்கூடிய வாழை தண்டை  கொண்டு கிட்னி கல் அடைப்பை சரி செய்து ஆரோக்கியமாக வாழலாம் 

2.வாழை தண்டை அரைத்து அதில் உப்பு  சேர்க்காமல் குடித்து வந்தால்  சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதால் நாம் நிம்மதியாக நோயின்றி வாழலாம் .

3. வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரின் அளவு அதிகரிக்கும் .அதனால்  கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறும்.

4.ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது கல்லடைப்பு மட்டுமல்ல மேலும் பல நோய்களிடம் இருந்து உடலை பாதுகாக்கும்.

5.காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது. உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் கிட்னி நோயின்றி வாழலாம்.