கிட்னியில் கல் இருக்கிறவங்க இந்த சட்னியை சாப்பிடவே கூடாது

 
kidney

கிட்னியில் கற்கள் இன்று வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது .இந்த கல் அளவில் சிறியதாக இருக்கும்போது மருந்து மாத்திரை மூலம் கரைத்து விடலாம் .ஆனால் அளவில் பெரிதாக இருந்தால் அவற்றை அறுவை சிகிச்சை செய்துதான் வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகும் .மேலும் சிலருக்கு ஒரு முறை ஆப்ரேஷன் செய்து எடுத்தாலும் மீண்டும் மீண்டும் உருவாகும் .அதை கவனிக்காவிட்டால் கிட்னியையே பாதித்து விடும் அளவிற்கு அபாயகரமானது இந்த கிட்னி கற்கள்

மனித உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகின்றன.

kidney

 சிறுநீரக கற்கள் இருப்பவர்கள்  இந்த பின்வரும் உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க..

உங்களுக்கு ஏற்கனவே கிட்னி கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது பிரச்சனையை மேலும் அதிகரிக்த்து ,கிட்னி கற்கள் பெரிதாக வளரும் வாய்ப்புள்ளது

மேலும் கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது கற்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சட்னியை சாப்பிடக்கூடாது.

தக்காளி சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. தக்காளி விதையில் உள்ள ஆக்சலேட் உடலில் கற்களை உண்டாக்குகிறது. எனவே தேவைக்கு அதிகமாக தக்காளி சட்னியை  உட்கொள்வதை தவிர்க்கவும்.

வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. மேற்கண்ட உணவு முறைகளை தவிர்த்து வந்தால் கிட்னி கல்லின் அபாயத்திலிருந்து நாம் தப்பலாம்