தீராத மூட்டு வலிக்கு ஒரு வீட்டு வைத்தியம்

நமது நாட்டில் ஆங்கில வைத்தியம் பிரபலமடைவதற்கு முன்பு சித்த வைத்தியம்தான் நம்மை காப்பாற்றியது
அந்த சித்த வைத்தியத்தில் அதிகம் உபயோகமாகும் பொருளில் நிலாவாரையும் ஒன்று .இந்த நிலாவரை நமக்கு நிறைய ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .இதை தேனுடன் கலந்து சாப்பிட ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை கூடும் .இதன் மூலம் வாயுத்தொல்லை ,மலசிக்கல் ,போன்ற பிரச்சினை தீரும் .நிலாவரை இலையை தலையில் தேய்த்து வந்தால் இளநரை பிரச்சினை தீரும் ,மேலும் பக்கவாதம் ,வண்டுக்கடி ,பூச்சி கடி போன்றவைக்கு இந்த நிலாவரை பயன்தரும்
1.நிலாவரை சூரணத்தால் மூட்டு வலி, கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி போன்றவை குணமாகும்.
2.இந்த எலும்பு இணைப்புகளில் உள்ள ஜெல்லை வலிமையாக்கும் ஆற்றல் நிலாவரைக்கு உண்டு.
3.நிலாவரை பொடியை சுண்டைக்காயளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வரலாம் 4.இதனால் எலும்பு இணைப்பு ஜெல்களை அதிகரித்து எலும்புதேய்வு, மூட்டுவீக்கம், போன்ற பாதிப்புகளை குணமாக்கிவிடும்.
5..நிலாவரை பொடியை சிறிதளவு எடுத்து அதை நீரில் சுண்டக்காய்ச்சி அதைத் தேநீர் போல் அருந்தி வந்தால் மூட்டு வலி முதல் பல எலும்பு பிரச்சினை தீரும்