உடலில் ஏற்படும் அஜீரண பிரச்சனையை தீர்க்க இது உதவும்

 
mint

பொதுவாக புதினா நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது .எனவே இந்த பதிவில் நாம் புதினா மூலம் அடையும் பயன்கள் பற்றி தெளிவாக காணலாம் 

1.நம் உடலில் ஏற்படும் அஜீரண பிரச்சனையை தீர்க்க புதினா உதவுகிறது.
2.பெரும்பாலும் அனைவருக்கும் அடிக்கடி வயிற்று வலி வருவது உண்டு. இதனை பலர் மலச்சிக்கலால் தான் வரும் என்று சொல்லிக்கொள்வார்கள். 
3.ஆனால் அஜீரணத்தின் காரணமாகவும் வயிற்று வலி பிரச்சனை வரும்.
4.அப்படி அஜீரண கோளாறு வரும் நிலையில் புதினாவை நாம் பயன்படுத்தினால் நம் வயிற்றில் உள்ள வலியையும் அஜீரண பிரச்சனையையும் சமாளித்து வலியில் இருந்து காக்கும். 
5.முதலாவதாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பிறகு புதினா இலைகளை அதில் சேர்க்க வேண்டும்.
6.இரண்டும் நன்றாக பத்து நிமிடம் கொதித்த பிறகு தண்ணீரை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும்.
7.இல்லையெனில் ஒரு ஆறு முதல் ஏழு இலைகளை எடுத்து நன்றாக கழுவி நசுக்கி பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும் 
8.பிறகு வெதுவெதுப்பான நீரில் நறுக்கிய இலைகளை கலந்து குடிக்க வேண்டும். 
9.மேலும் புதினா இலைகளை நன்கு உலர்த்தி பொடியாக்கி நாம் உண்ணும் உணவிலும் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண பிரச்சனையிலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.