இலந்தை பழ பொடியை கொதிக்க வைத்து பருகினால் எந்த நோய் அருகில் கூட வராது தெரியுமா ?
![ilandhai](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/70ba6311c5e5fbb81acf041788d1aeff.jpeg)
பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்துக்கு அந்தந்த சீசனில் கிடைக்கும் பழ வகைகளை அவசியம் எடுத்து கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கும் அந்த வகையில் இந்த பதிவில் இலந்தை பழம் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்
1.இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் உறுதிபெறும்.
2.இலந்தை பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.
3.இலந்தை பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு
குறையும்.
4. இலந்தை பழ பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து,
அரிசி கஞ்சியில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும்.
5.இலந்தை பழம் சாப்பிட்டால் நன்றாக பசியெடுக்கும்.
6.. ஒரு தேக்கரண்டி இலந்தை பழ பொடியை நீரில் கொதிக்க
வைத்து பருகினால்மன குழப்பம் நீங்கி மன அமைதி, உண்டாகும் .
7.இலந்தை பழம் சாப்பிட்டால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி , இளமையான தோற்றம்
கிடைக்கும்.
8.இலந்தை பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி வைத்து கொண்டு காலையும்,
மாலையும் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியை தூண்டி,
நன்கு பசியை உண்டாக்கும்.
9.. இலந்தை பழம் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் அதிக
உதிர போக்கை தடுக்கும் .
10.இலந்தை பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் உண்டாகும்