எந்த நேரத்தில் பசியெடுத்தால் எப்படி சமாளிப்பது ?

 
food

மனிதன்  பசி எடுக்கும் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் 'பசித்து புசி' என்று கூறிவிட்டு சென்றனர் .ஆனால் இன்று சுவையான உணவை பார்க்கும்போதெல்லாம் பசி எடுக்காமலே உண்பதால் பல நோய்களுடன் போராட வேண்டியுள்ளது .பசியின் வகைகளையும் அதை போக்கும் முறையையும் பற்றி பார்க்கலாம்

மனரீதியான பசி:- நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம்.

80,000+ Mouthwatering Food Pictures & Images [HD] - Pixabay

கண் பசி:- பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததால் சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது. சிலருக்கு சில பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்புவது சாலச் சிறந்தது.

 வாய் பசி:- ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உணவு ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அது உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள். திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்..

இப்படி தேர்ந்தெடுத்து பசி நேரத்த்தில் சாப்பிட்டால் எந்த நோயும் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வாழலாம்