இந்த பத்து கீரையிருந்தால் எமன் பயமின்றி வாழலாம்

 
greens

கீரைகளில் இருக்கும் இரும்பு சத்துக்களால் அவை சிறந்த ஊட்ட சத்துள்ள உணவாக நம் பயன்பாட்டில் உள்ளது ,மேலும் கீரையில் உள்ள இரும்பு சத்துக்கள் நமக்கு ரத்த சோகை நோய் வராமல் பாதுகாப்பு கொடுக்கிறது .இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30000 குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாட்டால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது ,கீரையில் உள்ள கரோட்டின் என்று பொருள் விட்டமின் 'ஏ'வை நமக்கு வழங்குகிறது .கீரையை அதிகமாக நீண்ட நேரம் சமைத்தால் இந்த கரோட்டின் போய் விடும் .அதனால் அளவாக கொதிக்க விட்டு கீரையை சாப்பிடுங்கள் .பின் வரும் கீரைகள் நமக்கு அளிக்கும் நன்மைகள்

greens

1.அகத்திக்கீரையை அதிகமாக சாப்பிட்டால்  ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

2. காசினிக்கீரையை அதிகமாக சாப்பிட்டால்  சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

3. சிறுபசலைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

4. பசலைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் தசைகளை பலமடையச் செய்யும்.

5. கொடிபசலைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

6. மஞ்சள் கரிசலையை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

7. குப்பைகீரையை அதிகமாக சாப்பிட்டால் பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

8. அரைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் ஆண்மையை பெருக்கும்.

8. புளியங்கீரையை அதிகமாக சாப்பிட்டால் சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

9. பிண்ணாருக்குகீரையை அதிகமாக சாப்பிட்டால் வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

10. பரட்டைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்